TNPSC Thervupettagam

இந்தியாவின் காற்று மாசுபாட்டிற்கான மூல ஆதாரம்

July 5 , 2025 14 hrs 0 min 25 0
  • இந்தியாவின் PM2.5 மாசுபாட்டில் அம்மோனியம் சல்பேட் ஒரு முக்கிய இரண்டாம் நிலை மாசுபடுத்தியாக உள்ளது.
  • சல்பர் டை ஆக்சைடு (SO) மற்றும் அம்மோனியா (NH) காற்றில் வினைபுரியும் போது இது உருவாகிறது.
  • இந்த மாசுபடுத்தியானது இந்தியாவின் மொத்த PM2.5 அளவுகளில் சுமார் 34% என்ற பங்கினைக் கொண்டுள்ளது.
  • SO உமிழ்வின் மிகவும் முக்கிய ஆதாரம் ஆனது நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் ஆகும்.
  • இந்தியாவில் SO உமிழ்வுகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஆலைகளிலிருந்து வெளியாகின்றன.
  • 8% ஆலைகளில் மட்டுமே கனல் வாயு சல்பர் நீக்க (FGD) அமைப்புகள் உள்ளன.
  • நிலக்கரி ஆலைகளுக்கு அருகில், அதாவது 10 கிலோ மீட்டருக்குள் சுமார் 2.5 மடங்கு அதிகமான அளவில் மாசுபாடு அதிகமாக உள்ளது.
  • காற்று வழியாக பரவும் இந்த மாசுபாட்டால் தொலைதூர நகரங்கள் கூட பாதிக்கப் படுகின்றன.
  • மாசுபட்ட 130 நகரங்களில் 114 நகரங்களில் அம்மோனியம் சல்பேட்டிலிருந்து வெளியாகும் மாசுபாட்டினால் 30% PM2.5 அதிகமாகக் காணப்படுகிறது.
  • அம்மோனியம் நைட்ரேட்டும், சில நேரங்களில் 50% வரை PM2.5 மாசுபாட்டில்  சேர்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்