இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் டிஜிட்டல் தலையீடுகள்
June 30 , 2026 8 days 80 0
குற்றவியல் நீதி அமைப்பில் விசாரணை, வழக்குத் தொடுத்தல் மற்றும் தடயவியல் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) நான்கு புதிய டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) அபிக்யான், CrPI, e-Prosecution 2.0 மற்றும் e-Forensics 2.0 ஆகிய நான்கு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1986-ஆம் ஆண்டு புதுதில்லியில் நிறுவப்பட்ட NCRB, இந்தியாவின் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகளின் மையக் களஞ்சியமாகும்.
தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (NAFIS) தரவுத்தளத்தைப் பயன்படுத்தி நபர்களை நிகழ்நேரத்தில் கைரேகை மூலம் அடையாளம் காண 'அபிக்யான்' செயலி உதவுகிறது.
சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் தொடர் குற்றவாளிகளை அடையாளம் காண முக அங்கீகாரம், கருவிழி வருடல் மற்றும் மரபணு (DNA) பொருத்தம் ஆகியவற்றை 'CrPI' அமைப்பு பயன்படுத்துகிறது.
'e-Forensics 2.0' என்பது நாடு முழுவதும் உள்ள தடயவியல் ஆய்வகங்களை இணைத்து, டிஜிட்டல் வழக்குகளின் கண்காணிப்பு மற்றும் அறிக்கைகளை நிர்வகிக்கிறது.
'e-Prosecution 2.0' என்பது விரைவான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புக்காக காவல்துறை, வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது.