TNPSC Thervupettagam

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி சேமிப்பு இலக்கு 2035-36

June 27 , 2026 13 hrs 0 min 19 0
  • எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்விநியோகத் தொகுப்பு நிலைத் தன்மையை வலுப் படுத்துவதற்காக, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) புனல் மின் சேமிப்புத் திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இதற்கான வழிகாட்டி வரைபடத்தை மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மின்சார வாரியம் (CEA) தயாரித்துள்ளது.
  • புனல் மின் சேமிப்பு முறையானது, அதிக தேவை உள்ள காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்கவும் உற்பத்தி செய்யவும் வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர்த் தேக்கங்களைப் பயன்படுத்துகிறது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்தியா சுமார் 7.2 ஜிகாவாட் செயல் பாட்டுத் திறனையும், 11.6 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ள திறனையும் கொண்டு உள்ளது.
  • இந்தியாவின் மொத்த நீர்மின் திறன் சுமார் 56.3 ஜிகாவாட்டாக உள்ளதுடன் மேலும் இதனை விரிவாக்குவதற்கான கணிசமான பயன்படுத்தப் படாத சாத்தியக் கூறுகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்