TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் 22 சதவிகிதம் குறைவு

November 25 , 2019 2080 days 628 0
  • நாட்டில் கிட்டத்தட்ட 22% நிலத்தடி நீர் வறண்டுவிட்டதாக அல்லது ‘மோசமான’ &  ‘அதிக அளவில் சுரண்டப்பட்ட’ வகைகளில் இருப்பதாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board - CGWB) ஆனது ‘இந்தியாவின் மாறுபட்ட நிலத்தடி நீர் வளங்கள்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 6,881 பகுதிகளில் 1,499 (தொகுதிகள் / மண்டலங்கள் / தாலுகாக்கள்) ‘அதிக சுரண்டல்’ (1,186 பகுதிகள்) மற்றும் ‘மிக மோசமானது’ (313 பகுதிகள்) என்ற பிரிவுகளின் கீழ் வந்தன என்பதை இது காட்டுகிறது.
  • அதிக எண்ணிக்கையிலான நீர் பற்றாக்குறைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்