2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மருந்துத் துறையானது ஏற்றுமதியில் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தியாவின் மருந்தியல் துறை 103% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதமும் இனம்சார் (ஜெனிரிக்) மருந்துகளில் 20 சதவீதமும் இந்தியாவிலிருந்து வருவதால், இந்தியா மருந்துப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக திகழ்கிறது.
ஆப்பிரிக்காவின் இனம்சார் மருந்துகளுக்கான தேவைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
இந்திய நாடானது DPT, BCG மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஆகியவற்றை வழங்குவதில் முன்னணியில் உள்ளது
உலக சுகாதார அமைப்பின் 70% அளவிலான தடுப்பூசிகள் (அத்தியாவசிய நோய்த் தடுப்பு அட்டவணையின் படி) இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன.
இந்தியா ‘உலகின் மருந்தகமாக’ செயல்பட்டு வருகிறது.
இந்திய மருந்துத் துறையானது, உலகளவில் அளவீட்டில் 3வது இடத்திலும், மதிப்பின் அடிப்படையில் 14வது இடத்திலும் உள்ளது.