திருநர் சமூகத்திற்கான இந்தியாவின் முதலாவது பல்கலைக் கழகமானது உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் திறக்கப்பட இருக்கின்றது.
திருநர் சமூக உறுப்பினர்கள் கல்வியைப் பெறுவதற்காக நாட்டில் அமைய இருக்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும்.
இந்தப் பல்கலைக் கழகமானது அகில பாரதிய கின்னார் சிக்சா சேவா அறக்கட்டளையால் (அகில இந்திய திருநர் கல்விச் சேவை அறக்கட்டளை) கட்டப்பட்டு வருகின்றது.
இந்தப் பல்கலைக்கழகமானது இச்சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை படிக்கவும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறவும் வழிவகை செய்கின்றது.