TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது நேர மேலாண்மை ஆய்வு

August 3 , 2019 2111 days 805 0
  • மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையானது இந்தியாவின் முதலாவது நேர மேலாண்மை ஆய்வை (Time Release Study - TRS) நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • இது வணிகர்களுக்குப் பயனளிப்பதற்காக எல்லையில் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்துவதற்காக நடத்தப்படவிருக்கின்றது.
  • இது ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரையிலான காலகட்டத்தில் கடல், வான், நிலம் மற்றும் உள்நாட்டுத் துறைமுகம் உள்ளிட்ட 15 துறைமுகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவிருக்கின்றது.
  • குறிக்கோள் : வர்த்தகப் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதாகும். மேலும் இது எல்லை நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அதனுடன் தொடர்புடைய கொள்கை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 
  • TRS என்பது சர்வதேச வர்த்தகப் போக்குவரத்தின் திறனை அளவிடுவதற்காக உலக சுங்க அமைப்பினால் ஆதரிக்கப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூறாகும். 
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்