இந்தியாவின் முதலாவது மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான நெடுஞ்சாலை
August 22 , 2021 1456 days 615 0
சூரிய சக்தி ஆற்றல் அடிப்படையிலான மின்சார வாகன மின்னூட்ட நிலையங்களின் கட்டமைப்போடு டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலையானது இந்தியாவின் முதலாவது மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான நெடுஞ்சாலையாக மாறியுள்ளது.
இந்த நிலையங்களின் கட்டமைப்பானது பாரத் கனரக மின்தொழிற்சாலை நிறுவனத்தினால் (BHEL) அமைக்கப்பட்டுள்ளது.
இது கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கலப்பு & மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றைத் துரிதமான நடைமுறைக்குக் கொண்டு வருதல் (முதற் கட்டம்) என்ற திட்டத்தின் (FAME – I) கீழ் அமைக்கப்பட்டுள்ளது.