இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் முப்படை பயணக் குழு
- முப்படைகளின் அனைத்து மகளிர் கடல் பயணக் குழுவானது சமீபத்தில்நாடு திரும்பி உள்ளது.
- அவர்கள் செஷெல்ஸ் நாட்டிற்கான சுமார் 1,800 கடல் மைல் அளவிலான சர்வதேசப் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
- அவர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு இந்திய ஆயுதப் படைகள் கப்பலான 'திரிவேணி'யில் இந்தப் பயணத்தினை மேற்கொண்டனர்.
- காலாட்படை, கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 11 பெண் அதிகாரிகள் கொண்ட குழு இந்தப் பயணத்தில் பங்கேற்றது.
- இந்தக் குழுவினரில்:
- இந்தியக் காலாட்படையின் - லெப்டினன்ட் கர்னல் அனுஜா, மேஜர் கரம்ஜீத், மேஜர் தான்யா, கேப்டன் ஓமிதா, கேப்டன் தௌலி மற்றும் கேப்டன் பிரஜக்தா
- இந்தியக் கடற்படையின் - லெப்டினன்ட் கமாண்டர் பிரியங்கா
- இந்திய விமானப்படையின் – வான்படைத் தலைவர் விபா, வான்படைத் தலைவர் ஷ்ரத்தா, வான்படைத் தலைவர் அருவி மற்றும் வான்படைத் தலைவர் வைஷாலி ஆகியோர் அடங்குவர்.

Post Views:
12