இந்தியாவின் முதல் இணையவழி சொத்து வரி மாவட்டம் – தம்தாரி
February 4 , 2026 14 hrs 0 min 30 0
சத்தீஸ்கரில் உள்ள தம்தாரி மாவட்டம், 'சமர்த் பஞ்சாயத்து' இணைய தளம் மூலம் சொத்து வரி வசூலித்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
நாகரி வட்டாரத்தில் உள்ள சங்கரா கிராமப் பஞ்சாயத்தில், UPI வசதியுடன் கூடிய இணையவழி கட்டண முறை மூலம் இது தொடங்கப்பட்டது.
இனி குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே சொத்து வரிகளைச் செலுத்தலாம் என்பதோடு இது மனித வேலைகளையும் தாமதங்களையும் குறைக்கிறது.
இந்த அமைப்பு தம்தாரி மாவட்டத்தில் உள்ள சுமார் 400 கிராமப் பஞ்சாயத்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த மாநிலம் முழுவதும் இது விரிவுபடுத்தப் படலாம்.
சமர்த் இணையதளம் வெளிப்படைத் தன்மை, வருவாய் வசூல் மற்றும் பஞ்சாயத்துகளின் நிதிச் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது.