சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஒலிம்பிக் மதிப்புசார் கல்வித் திட்டமானது ஒடிசாவில் தொடங்கப்பட்டது.
ஒலிம்பிக் மதிப்புசார் கல்வி என்பது ஒலிம்பிக் விழுமியங்களான தகைசால்தன்மை, மரியாதை மற்றும் நட்பு ஆகியவை பற்றி இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடைமுறை ஆகும்.
இது முதலில் மதிப்புகள் அடிப்படையிலான ஒரு பாடத் திட்டமாக ரூர்கேலா மற்றும் புவனேஸ்வரில் உள்ள 90 பள்ளிகளில், சுமார் 32,000 குழந்தைகளுக்குச் சேவையை வழங்கும் வகையில் அமல்படுத்தப்படும்.