கிராபீனின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் முதல் விரிவான கிராபீன் கொள்கையை கேரளா அங்கீகரித்துள்ளது.
கிராபீன் என்பது ஒரு அறுகோண பின்னலில் அமைக்கப்பட்ட கார்பன் அணுக்களின் ஒற்றை அடுக்கு ஆகும் என்பதோடு மேலும் அதன் அதிக வலிமை, மின் கடத்துத்திறன் மற்றும் வெப்ப நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றது.
இந்தக் கொள்கையானது பாலக்காட்டில் ஒரு பிரத்தியேக கிராஃபீன் தொழில்துறை பூங்காவையும், ₹200 கோடி முதலீட்டில் ஒரு டிஜிட்டல் புத்தாக்க மையத்தையும் முன் மொழிகிறது.
கிராபீன் அடிப்படையிலான கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை ஆதரிப்பதற்காக கிராபீன் பூங்காவை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பூங்காக்களில் உற்பத்தி அலகுகளுக்கான குத்தகைக் பண வழங்கீடுகளில் கேரளா 50% மானியத்தை வழங்கும்.