மும்பை நகரானது, பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை இந்தியாவின் முதல் நகர நிர்வாகத் தலைமையிலான பருவநிலை நடவடிக்கை முன்னெடுப்பான 2026 ஆம் ஆண்டு மும்பை பருவநிலை வாரம் என்ற கொண்டாட்டத்தினை நடத்த உள்ளது.
பருவநிலை நடவடிக்கைகளை குழந்தை உரிமைகளுடன் இணைப்பதுடன், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு குடிமக்களால் இயக்கப் படும் பருவநிலை தீர்வுகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
யுனிசெஃப் இந்தியா மற்றும் YuWaah ஆகியவை இளைஞர்களை பருவநிலைக் கொள்கை மற்றும் செயல்பாட்டில் ஈடுபடுத்தும்.
கல்லூரி மாணவர்களை அணி திரட்டவும், LiFE திட்டத்தின் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) கீழ் மின்னணு கழிவு மேலாண்மையை முன்னிலைப்படுத்தவும் பிப்ரவரி 9 முதல் 16 வரை வளாக ரீதியான பருவநிலை சாலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
16–24 வயதுடைய புதுமைப்பித்தர்கள் உணவு அமைப்புகள், நகர்ப்புற மீள்தன்மை மற்றும் ஆற்றல் மாற்றம் குறித்தத் தீர்வுகளை முன்வைக்க ஒரு இளைஞர் பசுமை புத்தாக்கச் சவால் அனுமதிக்கும்.