இந்தியாவின் முதல் நடமாடும் காந்த அதிர்வு பிம்பமாக்கல் (MRI) அமைப்பானது, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப் பட்டது.
இந்த நடமாடும் MRI அமைப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs), அவசர சிகிச்சை வார்டுகள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளில் உள்ள ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குப் படுக்கை அருகிலேயே மூளை வருடல் / ஸ்கேன் எடுக்க அனுமதிக்கிறது.
ஒரு மிகக் குறைந்த புலன் கொண்ட இந்த MRI சாதனத்தை நேரடியாக நோயாளியிடம் கொண்டு செல்ல முடியும் என்பதால், நோயாளிகளை MRI அறைகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இது தில்லி AIIMSல் உள்ள நரம்பியல் நிலைமைகளுக்கான மையத்தில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த அமைப்பு பக்கவாதம், காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மூளைக் கோளாறுகளை விரைவாகக் கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.