பெங்களூருவின் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனமானது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட VEER EV எனப்படும் இந்தியாவின் முதல் மின்சார வாகனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனம் ஆனது ரேடாருக்குப் புலப்படாதத் திறன்கள், வெவ்வேறு நிலப் பரப்புகளில் இயங்கும் திறன் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கான விரைவான கள-பழுதுபார்ப்பு தயார்நிலையைக் கொண்டுள்ளது.
VEER EV ஆனது பாலைவனங்கள், மலைகள் மற்றும் காடுகளில் அமைதியாக சத்தமின்றி இயங்கக் கூடியது என்பதால், குறைந்த சத்தம் மற்றும் வெப்ப உமிழ்வு மூலம் கண்டறிதலைத் தடுக்கிறது.
இது பாதுகாப்புத் துறையின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான பாதுகாப்புத் துறையின் புதுமை உருவாக்கத்தில் சிறந்து விளங்குதல் (iDEX) விருதை வென்றது.