நிதித் துறை அமைச்சகமானது, ‘இந்தியாவின் பருவநிலை நிதி வகை பிரித்தல்’ வரைவு கட்டமைப்பினை வெளியிட்டுள்ளது.
இது மின்சாரம், போக்குவரத்து, கட்டிடங்கள், வேளாண்மை மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைப்பதில் சவால் மிகுந்த இரும்பு மற்றும் எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற துறைகள் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது.
இந்த வகை பிரித்தல் ஆனது மேம்பாட்டு ஆதாயங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்பு மற்றும் மீள்தன்மையை உருவாக்குவதை வலியுறுத்தும்.
இந்தப் புதிய ஆவணமானது, பல செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை “பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையிலானது” மற்றும் “மாற்றத்தினை ஆதரிக்கும் வகையிலானது” என இரண்டு வகைகளாக வகைப்படுத்தும்.
2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வை அடைவது உள்ளிட்ட ஒரு தொடர் பருவநிலை இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உமிழ்வு தீவிரத்தினை சுமார் 45% குறைப்பதே அதன் இடைக்கால இலக்காகும்.
கூடுதலாக, 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவம் அடிப்படையிலான மூலங்களிலிருந்து தோராயமாக சுமார் 50% மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஒரு நிலைக்கு மாறுவதற்கான இலட்சிய இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது.