TNPSC Thervupettagam

இந்தியாவின் 5-அம்சத் திட்டம்

August 12 , 2021 1397 days 872 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனைத்து நாடுகளுக்குமான உயர்நிலை விவாதத்திற்குத் தலைமை ஏற்றார்.
  • பின்பு, கடல்சார் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் தலைமைத்துவ அறிக்கையினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (United Nations Security Council – UNSC) ஏற்றுக் கொண்டது.
  • UNSC அமைப்பின் உயர்நிலை விவாதத்திற்குத் தலைமை தாங்கிய முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பிரதமர் மோடி அவர்கள் பெற்றுள்ளார்.
  • இந்த உயர்நிலை விவாதத்தின் கருத்துரு, “கடல்சார் பாதுகாப்பின் மேம்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்பு” (Enhancing Maritime Security – A Case for International Cooperation) என்பதாகும்.
  • கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக 5 அம்சத் திட்டத்தினை பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.
  • அவை,
    • கடல் வர்த்தகத்திற்கானத் தடைகளை அகற்றுதல்
    • கடல்சார் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்தல்,
    • இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கடற்கொள்ளை (அரசு சாராத நிறுவனங்கள்) ஆகியவற்றால் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்தல்.
    • கடல்வளங்களைப் பாதுகாத்தல்
    • முறையான கடல்சார் இணைப்பினை (உள்கட்டமைப்பு) ஊக்குவித்தல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்