TNPSC Thervupettagam

இந்தியாவின் AI புரட்சி: விக்சித் பாரதத் திட்டத்திற்கான செயல் திட்டம்

June 9 , 2025 19 hrs 0 min 30 0
  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி: விக்சித் பாரதத்திற்கான ஒரு செயல் திட்டம்’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்களுக்கான தேவையில் மிகப்பெரிய எழுச்சியை இந்தியா எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் திறம் பெற்ற நபர்களுக்கான தேவை ஏற்படும் என கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் சுமார் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒரு பொருளாதாரமாக மாற நாடு முயன்று வருகிறது.
  • AICTE தரவுகளின்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட B.Tech கல்வி இடங்களின் எண்ணிக்கை 14.9 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது நான்கு ஆண்டுகளில் இது சுமார் 16 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
  • வீபாக்ஸ் என்ற நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் அறிக்கை ஆனது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறை 2025 ஆம் ஆண்டிற்குள் 28.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்