குவஹாத்தியில் உள்ள அசாம் கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்தியாவில் முதன்முறையாக கிளி போர்னா வைரஸ் 4 (PaBV-4)-ஐக் கண்டறிந்துள்ளனர்.
PaBV-4 என்பது ஆர்த்தோபோர்னாவைரஸ் ஆல்ஃபாப்சிட்டாசிஃபார்ம் (Orthobornavirus alphapsittaciforme) வகையைச் சேர்ந்த ஒரு பறவைகளைத் தாக்கும் வைரஸ் ஆகும் என்பதோடு இது கிளிகளில் புரோவென்ட்ரிகுலர் டைலேஷன் டிசீஸ் (PDD) என்ற ஒரு நோயை ஏற்படுத்துகிறது.
PDD நோயானது பறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, விரைவான உயிரிழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.
கூண்டில் வளர்க்கப்படும் கிளி இனப் பறவைகளிடையே இந்த வைரஸ் கண்டறியப் பட்டுள்ளதுடன், இது பறவை வளர்ப்பு மற்றும் கிளி பாதுகாப்புக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது.
இந்த ஆய்வில், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் முழுவதும் உள்ள 13 இனங்களைச் சேர்ந்த 83 பறவைகள் பரிசோதிக்கப்பட்டன என்ற நிலையில் அவற்றில் 44 பறவைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.