இந்தியாவில் நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மாநாடு
September 15 , 2022 1074 days 487 0
இந்தியாவில், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நிலையான கடற்கரை மேலாண்மை குறித்த முதல் தேசிய மாநாடானது தொடங்கப்பட்டது.
இந்தியாவின் கடலோரச் சமூகங்களின் பருவநிலை சார்ந்த நெகிழ்திறனை மேம்படுத்துவதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
இதில் இந்தியாவின் 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது கடலோர மற்றும் கடல்சார் பல்லுயிர், பருவநிலை தணிப்பு மற்றும் ஏற்பு மற்றும் கடலோர மாசுபாடு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்துருக்களில் கவனம் செலுத்துகிறது.