TNPSC Thervupettagam

இந்தியாவில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள்

August 22 , 2025 17 hrs 0 min 29 0
  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) மற்றும் மாநில அரசுகள் ஆனது, 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மாறி வரும் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட்டுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு CGWB அறிக்கையின்படி, 102 மாவட்டங்களின் நிலத்தடி நீர் வளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுகின்றன என்ற நிலையில் அவற்றில் 22 அபாய நிலையில் உள்ளது மற்றும் 69 மாவட்டங்கள் ஓரளவு அபாய நிலையிலும் உள்ளன.
  • ஜல் சக்தி அமைச்சகம் ஆனது, 256 நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டில் ஜல் சக்தி அபியான் (JSA) திட்டத்தினைத் தொடங்கியது.
  • JSA Catch the Rain (CTR) பிரச்சாரம் ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களுடன் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
  • 2023 JSA CTR ஆனது, ஜல் ஜீவன் திட்டத்தினால் அடையாளம் காணப்பட்ட 150 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தது.
  • 2024 ஆம் ஆண்டு பிரச்சாரம் ஆனது, நாரி சக்தி சே ஜல் சக்தி என்ற கருத்துருவின் கீழ் CGWB வாரியத்தினால் அடையாளம் காணப்பட்ட 151 மாவட்டங்களில் கவனம் செலுத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு JSA CTR பிரச்சாரம், CGWB வாரியத்தினால் அடையாளம் காணப்பட்ட 148 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, அடிமட்டப் பங்கேற்பு மற்றும் புதுமையான நிதியுதவிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • 2025-2026 ஆம் ஆண்டு பிரச்சாரத்திற்காக 148 மிகவும் அதிக கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களுக்கு மொத்தம் 148 மத்தியத் தலைமை அதிகாரிகள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்