இந்தியா 1998 ஆம் ஆண்டிலிருந்து பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
தற்போது இந்தியா உலகின் பால் உற்பத்தியில் 25 சதவீதம் பங்களித்து வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில், ஒரு சராசரி இந்தியர் தினமும் 471 கிராமுக்கு மேலான அளவில் பாலினை பெறுகிறார் என்ற நிலையில் இது உலக சராசரியான 322 கிராமை விட மிக அதிகமாகும்.
2014-15 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பால் உற்பத்தி 63.56% அதிகரித்து, 146.3 மில்லியன் டன்னிலிருந்து 239.2 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
2023-24 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது.
இது இந்தியாவின் மொத்தப் பால் உற்பத்தியில் 16.21 சதவீதத்தை பங்களித்தது.
பால் உற்பத்தியில் மேற்கு வங்காளம் மிகவும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.
536.76 மில்லியன் என்ற மொத்தக் கால்நடைகள் எண்ணிக்கையுடன், உலகின் மிகப் பெரிய எண்ணிக்கையில் கால்நடைகளைக் கொண்ட நாடு என்ற சிறப்பை இந்தியா கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவின் பால்வளத் துறையானது மிகப் பெரிய வேளாண் சார்ந்த ஒரு தொழிலாகும்.
பால் உற்பத்தித் துறையானது தேசியப் பொருளாதாரத்தில் 5 சதவீதப் பங்குடன் 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரடியாக வேலைக்கு அமர்த்தியுள்ளது.