TNPSC Thervupettagam

இந்தியாவில் மண்வளச் சீரழிவு

March 4 , 2026 11 days 58 0
  • சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICRIER) " Healing Soils in India: For Better Crop Health and Human Nutrition" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • மண் சீரழிவுக்கு முக்கியக் காரணங்களில் யூரியாவின் அதிகப்படியான பயன்பாடு, தீவிர விவசாயம், ஒற்றைப் பயிர் சாகுபடி, எச்சங்களை எரித்தல் மற்றும் நெல் வயல்களில் நீர் தேக்கம் ஆகியவை அடங்கும்.
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.3 பில்லியன் டன் மேலடுக்கு மண்ணையும், 5.4–8.4 மில்லியன் டன் ஊட்டச்சத்துக்களையும் அரிப்பு காரணமாக இழக்கிறது.
  • மண் தரவீழ்ச்சியானது பயிர்களின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைத்து, பயிர்களின் தரத்தைக் குறைக்கிறது என்ற நிலையில் மேலும் துத்தநாகம், இரும்பு மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகளால் குழந்தைகளில் மறைநிலை பசியை ஏற்படுத்துகிறது.
  • மண் வள அட்டை திட்டம், PM-PRANAM, பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் வேம்பு பூசப்பட்ட யூரியா போன்ற திட்டங்கள் மூலம் அரசாங்கம் மண் வளத்தை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்