நிதி ஆயோக் மற்றும் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி) ஆகியவை இணைந்து மின் கழிவுகள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி மறுசுழற்சி குறித்த அறிக்கையை வெளியிட்டன.
சுழற்சிப் பொருளாதாரம் என்பது பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வது, குத்தகைக்கு விடுவது, மீண்டும் பயன்படுத்துவது, பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தியாவின் மின்னணுக் கழிவுகளில் சுமார் 78% முறைசாரா துறையால் பிரித்தெடுக்கப் படுத்தப்படுகிறது என்பதோடு இதில் 10-20% பொருட்கள் மட்டுமே மீட்கப்படுகின்றன.
2024ல் மின்னணுக் கழிவுகளின் உற்பத்தி சுமார் 6.19 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியது என்பதோடுமேலும் இது 2030க்குள் 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரக் கூடும்.
இந்தியாவின் மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள் (EWMR), 2022 மற்றும் மின்கலன் கழிவு மேலாண்மை விதிகள் (BWMR), 2022 ஆகியவை மறு சுழற்சி மற்றும் சேகரிப்பை கட்டாயமாக்குகின்றன என்பதோடுமேலும் அவை நிலத்தில் கொட்டி அழிப்பதைத் தடை செய்கின்றன.
விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (EPR) விரிவுபடுத்துதல், மின்கலன் மறு சுழற்சியை இந்திய கார்பன் சந்தையில் ஒருங்கிணைத்தல், மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை சில பரிந்துரைகளில் அடங்கும்.