இந்தியாவில் முதன்முறையாக மின்னழுத்த மூலமாற்றி அடிப்படையிலான HVDC அமைப்பு
June 14 , 2021 1491 days 582 0
இந்திய மின்சார அமைப்புக் கழகமானது (Power Grid Corportation of India Ltd – PGCIL)இந்தியாவிலேயே முதல்முறையாக மின்னழுத்த நேர்மின்னோட்ட (High Voltage Direct Current – HVDC) மின்சாரப் பரப்புகை அமைப்பின் முழுமையான செயல்பாட்டைத் தொடங்கி வைத்துள்ளது.
இது நாட்டின் தென்பகுதியினுடைய ஆற்றல் அமைப்பினை வலுப்படுத்தும்.
PGCIL நிறுவனமானது 320 KV, 2000 MW திறன் உடைய புகழூர் (தமிழ்நாடு) – திருச்சூர் (கேரளா) ஆகியவற்றுக்கு இடையேயான மின்னழுத்த மூல மாற்றி என்ற அடிப்படையில் அமைந்த உயர் மின்னழுத்த நேர்மின்னோட்ட அமைப்பின் மோனோ போல் – I (Monopole-I) அல்லது ஒற்றைத் துருவம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.