TNPSC Thervupettagam

இந்தியாவில் முதல்முறையாக உப்பு நீர் மூலம் இயங்கும் விளக்கு

August 20 , 2022 1024 days 485 0
  • ‘ரோஷிணி’ எனப்படும் உப்பு நீர் மூலம் இயங்கும் விளக்கு ஆனது இந்தியாவில் முதல் முறையாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது LED விளக்குகளுக்கு ஆற்றலை வழங்குவதற்காக கடல்நீரைப் பயன்படுத்துகிறது.
  • இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற முதல் வகை விளக்காகும்.
  • இது கடல்சார் ஆராய்ச்சிக்காக சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தால் இயக்கப்படும் சாகர் அன்வேஷிகா எனப்படும் கடலோர ஆராய்ச்சிக் கப்பலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உப்பு நீர் மூலம் இயக்கப்படும் இந்த விளக்குகள் LED வகை விளக்குகளுக்கு ஆற்றலை வழங்குவதற்காகவே, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுப் பொருத்தப்பட்ட இரு மின்முனைகளுக்கு இடையே கடல்நீரை மின்பகுளிகளாகப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்