இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), ஜவுளி மற்றும் தோல் போன்ற துறைகளுக்கு உதவும் வகையில், இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்து 100% வரியில்லா அணுகலை வழங்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நேரடி அந்நிய முதலீடாக (FDI) முதலீடு செய்யும்.
இந்தியா 70% சுங்கவரி வரிகளைத் தளர்த்தியுள்ளது, ஆனால் பால், சர்க்கரை மற்றும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 30% வரிகளை அதிலிருந்து தவிர்த்து உள்ளது.
தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான ‘உருவாகும் இட விதிகள்' இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன, மேலும் மாணவர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான விசாக்களையும் இது அனுமதிக்கிறது.
இது ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) முறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சேவைகளையும் மேம்படுத்துகிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகள் (ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் - ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து), ஐக்கியப் பேரரசு, ஐரோப்பிய ஒன்றியம், ஓமன் மற்றும் தற்போது நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா மேலும் ஏழு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.