கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரம்பானன் கோயில் வளாகத்தைப் புனரமைக்க இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்துள்ளன.
9-ஆம் நூற்றாண்டில் சஞ்சய வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோயில், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோயில் வளாகமாகும் என்பதோடு இது ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (1991).
இது இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது என்பதோடுஇதில் சிவன் கோயில் சுமார் 47 மீட்டர் உயரம் கொண்டது.
இராமாயண நிகழ்வுகளின் செதுக்கல்களுடன் சுமார் 240 கோயில்கள் உள்ள இந்த வளாகம் தென்னிந்திய (பல்லவ) கட்டிடக்கலைத் தாக்கத்தை வலுவாகக் காட்டுகிறது.