TNPSC Thervupettagam

இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான இணைப்பு மற்றும் புத்தாக்க மையம்

October 15 , 2025 16 days 52 0
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை இணைந்து நான்கு ஆண்டுகளில் 282 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியா- ஐக்கியப் பேரரசு இணைப்பு மற்றும் புத்தாக்க மையத்தினை (CIC) தொடங்கியுள்ளன.
  • CIC என்பது 6G, AI மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்புகள் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான தொலை தொடர்பு தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ஓர் இருதரப்பு ஆராய்ச்சித் தளமாகும்.
  • இந்தியா- ஐக்கியப் பேரரசு 2035 ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வலையமைப்புப் பயனுறு திறன் வடிவமைத்தலுக்கான செயற்கை நுண்ணறிவு, கிராமப்புற இணைப்புக்கான நிலப்பரப்பு சாராத வலையமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு இணையவெளிப் பாதுகாப்பு ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப் படும் பகுதிகளில் அடங்கும்.
  • டிஜிட்டல் இணைப்பு சார்ந்தப் புத்தாக்கங்களில் கல்வி, தொழில்துறை மற்றும் அரசு ஒத்துழைப்புக்கான மையமாக CIC செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்