TNPSC Thervupettagam

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் பாதுகாப்புக் கூட்டாண்மை

January 31 , 2026 14 days 71 0
  • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) தங்களின் முதல் விரிவான பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம் இந்தியாவில் நடைபெற்ற 77வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது கையெழுத்திடப்பட்டது.
  • இது கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்புசார் தொழில்தொழில், இணைய வெளி அச்சுறுத்தல்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இதனுடன், ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் (SOIA) குறித்த பேச்சுவார்த்தைகளையும் இரு தரப்பினரும் தொடங்கினர்.
  • இந்தக் கூட்டாண்மையானது, “2030-ஐ நோக்கி: இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்” என்ற ஒரு மூலோபாயச் செயல் திட்டத்தை உள்ளடக்கியது.
  • இந்தச் செயல் திட்டமானது செழிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்