TNPSC Thervupettagam

இந்தியா குறித்த சிறப்பு 301 அறிக்கை 2025

May 3 , 2025 43 days 85 0
  • இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைகள் (IPR) பாதுகாப்பு நிலை மற்றும் அமலாக்கம் குறித்த பல்வேறு கவலைகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா இந்தியாவை அதன் 'முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது.
  • அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகமானது, அதன் மிகவும் சமீபத்திய அறிக்கையில், இந்தியாவினை "அறிவுசார் சொத்துரிமையின் (IP) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சவாலான பெரியப் பொருளாதாரங்களில் ஒன்றாக" குறிப்பிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்தைப் பொறுத்தவரை, இந்தியாவை உலகின் மிகவும் ஒரு "சவாலான பெரியப் பொருளாதாரங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • இது சுமார் 100க்கும் மேற்பட்ட தன் வர்த்தகப் பங்குதாரர்களை மதிப்பிட்டு, அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் தர நிலைகளை மிக நன்கு பூர்த்தி செய்யாத நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தினை சுமார் 500 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் ஒரு நோக்கில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, 2024–25 ஆம் ஆண்டில் 41.18 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்