TNPSC Thervupettagam

இந்தியா பாகிஸ்தான் இடையே தகவல் பரிமாற்றம்

January 4 , 2022 1236 days 603 0
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரின் போதும் தாக்க முடியாத அணுசக்தி மையங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்டன.
  • அணுசக்தி மையங்கள் மற்றும் வளாகங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் இது மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த ஒப்பந்தமானது 1988 ஆம் அண்டு டிசம்பர் 31 அன்று கையெழுத்தாகி 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடங்கும் அணுசக்தி மையங்கள் மற்றும் வளாகங்கள் குறித்த சில தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
  • 1992 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று முதல் இந்தப் பரிமாற்றமானது  மேற்கொள்ளப் படும் வகையில் இந்த ஆண்டின் இந்தப் பரிமாற்றமானது 31வது தொடர் பரிமாற்றம் ஆகும். 
  • இந்தப் பட்டியல்கள், 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் கையெழுத்தான தூதரக அணுகல் மீதான ஒப்பந்தத்தின்  விதிமுறைகளுக்கு ஏற்ப பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி 01 மற்றும் ஜூலை 01 ஆகிய தேதிகளில் விரிவானப் பட்டியல்களைப் பரிமாறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்