இந்தியா மற்றும் அர்மேனியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
November 3 , 2017 3216 days 1242 0
இந்தியா மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகளுக்கு இடையே சுங்கம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பையும் பரஸ்பர உதவியையும் ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இசைவு அளித்திட பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இருநாட்டைச் சார்ந்த சுங்க அதிகாரிகளுக்கிடையே தகவல்கள் மற்றும் புலனாய்வு விவரங்களை பகிர்ந்திட சட்ட வரைமுறையை ஏற்படுத்தும்.