“இந்தியா மற்றும் ஆசியான் : எதிர்காலத்தை இணைந்து உருவாக்குதல்” அறிக்கை
March 10 , 2019 2267 days 793 0
இந்தியா மற்றும் ஆசியான் : “எதிர்காலத்தை இணைந்து உருவாக்குதல்” என்ற அறிக்கையானது இந்திய வர்த்தக மற்றும் தொழிலகக் கூட்டமைப்பு (FICCI - Federation of Indian Chambers of Commerce and Industry) மற்றும் மிகபெரிய ஆலோசனை வழங்கும் நிறுவனமான KPMG ஆகியவற்றினால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களிடையே இந்தியா மற்றும் 10 நாடுகள் உறுப்பினராக உள்ள ஆசியான் ஆகியவை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்னணு முறையிலான வணிகம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பான துறைகளிலும் கூட இந்தியா மற்றும் ஆசியான் வேகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளன.
சர்வதேச மின்னணு முறையிலான வர்த்தகத் துறையில் சீனா முதலிடத்தில் உள்ளது.