2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ள இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் (EFTA) வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தினை (TEPA) சுவிட்சர்லாந்து அங்கீகரித்துள்ளது.
TEPA ஆனது வர்த்தக தடைகளைக் குறைத்தல், சுங்க நடவடிக்கைகளை எளிமைப் படுத்துதல் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் EFTA ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தைகளில் அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EFTA தொகுதி (ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து) ஆனது 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
இந்த முதலீடு இந்தியாவில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதுடன் இது ஒரு பெரிய பொருளாதார ஊக்கத்தைக் குறிக்கிறது.
சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவில் 12வது பெரிய முதலீட்டாளராக உள்ளது.