TNPSC Thervupettagam

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு - முன்ஜாமீன்

February 4 , 2020 2017 days 716 0
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வானது முன்ஜாமீனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்க முடியாது என்றும் விசாரணை முடியும் வரை அதன் வரம்பு (முன்ஜாமீன்) தொடரும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure - CrPC) பிரிவு 438ன் நோக்கம் குறித்த தில்லி தலைநகரப் பகுதி அரசு (எதிர்) சுசிலா அகர்வால் என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் குறிப்புரையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பானது வழங்கப் பட்டுள்ளது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 438 (முன்ஜாமீன்) ஆனது ஒருவரைக் கைது செய்யப் படுவதிலிருந்துப் பாதுகாக்கும் வகையில் முன்ஜாமீன் வழங்குவதற்கான வழிகாட்டுதலுடன் தொடர்புடையதாகும்.
  • இந்த விதியானது அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மட்டுமே முன்ஜாமீன் வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்