மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தீவிரமயமாக்கப்பட்ட இந்திரதனுஷ் திட்டம் 3.0 (IMI 3.0) என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்குதலின் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவிட்-19 கொள்ளை நோய் காலத்தில் தடுப்பூசி பெறுதலை தவற விட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மீது IMI 3.0 கவனம் செலுத்தும்.
நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் மலிவு மற்றும் அணுகக் கூடிய வகையில் சுகாதாரச் சேவையை வழங்குவதற்காக இந்திரதனுஷ் திட்டம் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.