இனப் படுகொலையைத் தடுத்தல் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் மற்றும் அனுசரிப்பு மீதான சர்வதேச தினம் - டிசம்பர் 09
December 10 , 2019 2471 days 676 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை நிறுவியுள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதியானது 1948 ஆம் ஆண்டின் இனப் படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் மீதான ஒப்பந்தத்தை (“இனப் படுகொலை ஒப்பந்தம்”) ஏற்றுக் கொண்ட ஆண்டின் நினைவு தினமாகும்.
இந்த ஆண்டானது இந்த ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது
இத்தினமானது இனப் படுகொலை ஒப்பந்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இனப் படுகொலையின் குற்றத்தை எதிர்ப்பதிலும் தடுப்பதிலும் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.