இந்தப் பகுதியில் இருந்த 30 சுதேச அரசுகள் ஆனது ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு, இமாச்சலப் பிரதேச தலைமை ஆணையர் மாகாணமாக 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேசமாக மாற்றப் பட்டது.
1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தினால் இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று சிம்லாவைத் தலைநகராகக் கொண்டு இமாச்சலப் பிரதேசம் 18வது மாநிலமாக நியமிக்கப்பட்டது.