TNPSC Thervupettagam

இரண்டு குழந்தைகள் விதிமுறை - மத்தியப் பிரதேசம்

June 13 , 2026 15 hrs 0 min 50 0
  • அரசு வேலைகள் மற்றும் பணிப் பலன்களுக்கான தகுதியைக் கட்டுப்படுத்தும் இரண்டு குழந்தைகள் விதிமுறையை மத்தியப் பிரதேச அரசு திரும்பப் பெற்றுள்ளது.
  • 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட நபர்கள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர்கள் என முந்தைய விதிமுறை வரையறுத்திருந்தது.
  • மத்தியப் பிரதேச குடிமைப்பணிகள் (நடத்தை) விதிகள், 1965-இன் கீழ் 2001 ஆம் ஆண்டில் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • முன்மொழியப்பட்ட குடிமைப்பணிகள் விதிகளில் இருந்து இந்த விதிமுறையை நீக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அரசு ஊழியர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் இந்த முடிவு பயனளிக்கிறது.
  • இந்தத் திரும்பப் பெறுதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படாது; இந்த விதியின் கீழ் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப் பட மாட்டார்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்