TNPSC Thervupettagam

இராணுவ மருந்துகள் மீதான கருத்தரங்கு: SCO உறுப்பு நாடுகள்

September 8 , 2019 2111 days 564 0
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் (Shanghai Co-operation Organisation - SCO) சேர்ந்த உறுப்பு நாடுகளுக்கான இராணுவ மருந்துகள் மீதான கருத்தரங்கானது புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.
  • SCO பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் 2019-20ன் கீழ் இந்தியாவினால் நடத்தப்பட விருக்கும் “முதலாவது இராணுவ ஒத்துழைப்புக் கருத்தரங்குஇதுவாகும்.
  • SCO உறுப்பு நாடுகள் மூத்த இராணுவ மருத்துவப் பயிற்சியாளர்களால் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விருக்கின்றன.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியா SCOல் உறுப்பு நாடாக இணைந்தது.
  • இக்கருத்தரங்கானது ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தின் கீழ் உள்ள இந்திய ஆயுதப் படையினால் நடத்தப்பட விருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்