இந்திய அரசின் பல அமைச்சகங்கள் ஆனது, தங்கள் துறைகளில் சிறப்பானப் பங்களிப்பினை ஆற்றிய மற்றும் சிறந்து விளங்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, பல்வேறு குடிமை விருதுகளை நிறுவியுள்ளன.
பல்வேறு விருதுகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, ஒரு பொதுவான ‘ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தினை’ அரசு உருவாக்கியுள்ளது.
இது பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகள் அல்லது முகமைகளின் விருதுகளுக்கான அனைத்துப் பரிந்துரைகளையும் ஒரே எண்ணிமத் தளத்தின் கீழ் கொண்டு வரும்.
இந்தத் தளமானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுக் கூட்டாண்மையை உறுதி செய்ய உதவும் (ஜன் பகிதாரி).