இந்தியக் கடற்படை - வங்காளதேசக் கடற்படை ஆகியவற்றிற்கு இடையிலான 3வது இருதரப்புப் பயிற்சியானது 'போங்கோசாகர்' என அறியப் படுகின்றது.
போங்கோசாகர் பயிற்சியானது, இரு கடற்படைகளுக்கு இடையேப் பரந்த அளவிலான கடல்சார் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதன் மூலம் அதிக அளவு செயல்பாட்டுத் தன்மை மற்றும் கூட்டுச் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்தியக் கடற்படைக் கப்பல்களான உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட வழிகாட்டி ஏவுகணைப் போர்க் கப்பலான கோரா மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடல் ரோந்துக் கப்பலான சுமேதா ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.