தமிழ்நாடு வனத்துறையானது, இந்தியாவின் முதல் இருவாட்சி வளங்காப்பிற்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்காக வால்பாறை பீடபூமியில் உள்ள அட்டகட்டி பகுதியைத் தேர்வு செய்தது.
இந்த மையமானது, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் (ATR) பொள்ளாச்சி-வால்பாறை சாலைக்கு அருகில் உள்ள வனத்துறை வளாகத்தில் அமைக்கப்படும்.
அருகி வரும் உயிரினங்கள் வளங்காப்பு மூலதன நிதியின் கீழ் இந்த திட்டத்திற்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மையமானது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மலை இருவாட்சி, மலபார் சாம்பல் இருவாட்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாட்சி ஆகிய நான்கு இருவாட்சி இனங்கள் மீது கவனம் செலுத்தும்.
இந்த மையம் IUCN மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.