TNPSC Thervupettagam

உச்சநீதிமன்றம் - நான்கு புதிய நீதிபதிகள்

November 4 , 2018 2389 days 783 0
  • நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, R.சுபாஷ் ரெட்டி, M.R. ஷா மற்றும் அஜய் ரஸ்தோனி ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
  • இந்த நான்கு புதிய நீதிபதிகளின் நியமனத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 24லிருந்து 28ஆக உயர்ந்திருக்கின்றது.
  • உச்சநீதிமன்றம் 31 நீதிபதிகள் என்ற எண்ணிக்கை வரையில் கொண்டிருக்க அனுமதி பெற்றிருக்கின்றது.
  • இவ்வருடம் நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோஸ் என்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெற உள்ளனர். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி A.K. சிகிரி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்