TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள்

December 4 , 2025 15 hrs 0 min 35 0
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல், இனி அனைத்து புதிய வழக்குகளும் விசாரணைக்காக தானாகவே பட்டியலிடப்படும்.
  • வழக்கு தொடுப்பவர்கள் தங்கள் வழக்குகளைப் பட்டியலிடுவதற்கு என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
  • தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்ட அவசர வழக்குகள் சரிபார்ப்புக்குப் பிறகு 2 வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்படும்.
  • பிணை/ஜாமீன், முன்ஜாமீன், மரண தண்டனை, ஆட்கொணர்வு நீதிப்பேராணை, வெளியேற்றம் /உடைமை பறிமுதல் மற்றும் கட்டிட இடிப்பு வழக்குகளுக்கு என்று காலை 10:00 மணி முதல் காலை 10:30 மணி வரை அவசர கோரிக்கைகளை செய்யலாம்.
  • மூத்த வழக்கறிஞர்கள் வாய்மொழியான குறிப்பிடல்களை மேற்கொள்ள முடியாது; அவசர காலங்களில் இளநிலை/ஜூனியர் வழக்கறிஞர்கள் அவ்வாறு செய்யலாம்.
  • பழைய வழக்குகளுக்கான ஒத்தி வைப்புக் கடிதங்கள் பொதுவாக நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க அனுமதிக்கப் படுவதில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்