TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

July 22 , 2026 2 days 77 0
  • இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக (இந்தியத் தலைமை நீதிபதி நீங்கலாக) உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தவும், விரைவாக நீதியை வழங்குவதை உறுதி செய்யவும், உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956-ஐ திருத்துவதன் மூலம் மேலும் நான்கு நீதிபதிகளைச் சேர்க்க இந்த மசோதா முன்மொழிகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் 124(1) வது சரத்தானது உச்ச நீதிமன்றத்தை நிறுவுவதற்கு வழி வகை செய்கிறது, மேலும் சட்டமியற்றுதல் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 2008 ஆம் ஆண்டில் 25-லிருந்து 30 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 30-லிருந்து 33 ஆகவும் உயர்த்தப்பட்டது.
  • நீதிபதிகளின் சம்பளம், துணைப் பணியாளர்கள் மற்றும் வசதிகளுக்கான கூடுதல் செலவினம் இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்