புவனேஸ்வரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உஜ்வாலா துப்புரவுத் துணிகள் என்ற முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக துப்புரவுத் துணிகள் வழங்கும் குஷி திட்டத்திற்கு நிகராக மத்திய அரசின் இந்த திட்டம் செயல்படும்.
இந்த புதிய திட்டமானது பெண்கள் சுகாதார வசதிகளை அணுகுவதை அதிகப்படுத்தவும் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.