சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை நிலை வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2023–24 ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை 4.86% ஆகவும், நகர்ப்புற வறுமை 4.09% ஆகவும் இருப்பதாக பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியானது, கிராமப்புற வறுமை 2.8% ஆகவும், நகர்ப்புற வறுமை 1.1% ஆகவும் உள்ளது என இன்னும் குறைவான எண்களை முன்வைக்கிறது.
இந்த எண்கள் மக்களின் உண்மையான வாழ்க்கை நிலைமைகளைக் காட்டாது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
கலோரி உட்கொள்ளல் மூலம் வறுமையை அளவிடும் பழைய முறையை இந்தியா இன்னும் பயன்படுத்துகிறது.
"உணவினை வாங்குவதற்கான திறன் சார்ந்த ஒரு குறியீடு" என்று அழைக்கப்படும் ஒரு புதிய கருத்தாக்கம், ஓர் எளிய இந்திய உணவைப் பயன்படுத்தி உணவின் மலிவுத் தன்மையை மதிப்பிடுகிறது.
Crisil நிறுவனத்தின் மதிப்பீடுகள் ஆனது ஓர் அடிப்படை சைவ உணவினை வாங்க இந்தியாவில் சுமார் 30 ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடுகிறது.
ஆனால் 2023–24 ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 40% பேரும், நகர்ப்புற மக்களில் 10% பேரும் ஒரு நாளைக்கு இரண்டு உணவினையும் வாங்க முடியாத ஒரு நிலையில் இருந்தனர்.
இதில் வறுமை நிலை குறைவாகத் தோன்றினாலும், பலர் இன்னும் மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பட்டினி நிலையினால் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.