TNPSC Thervupettagam

உணவு தானிய உரிமையில் மாற்றங்கள் - அந்தியோதயா அன்ன யோஜனா

July 2 , 2026 9 hrs 0 min 19 0
  • அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) பயனாளிகளுக்கான உணவு தானிய உரிமையை திருத்தியமைக்க, 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NFSA) திருத்தம் செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • இது குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டிற்குப் பதிலாக ஒரு நபருக்கு மாதம் 7 கிலோ என வழங்க முன்மொழிகிறது, அதே வேளையில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ என்ற உச்ச வரம்பை தக்க வைத்துள்ளது.
  • இந்த மாற்றம், குறிப்பாக AAY திட்டத்தின் கீழ் உள்ள பெரிய குடும்பங்களுக்கான தனி நபர் உணவு விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உணவு தானிய விதிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (ICMR) ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுடன் (ஒரு வயது வந்தவருக்கு மாதம் ~7.5 கிலோ தானியங்கள்) ஒருங்கிணைக்கிறது.
  • AAY திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் ஏழ்மையான குடும்பங்களை உள்ளடக்கிய அதே வேளையில் முன்னுரிமை குடும்பங்கள் (PHH) ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ மானிய விலையில் பெறுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்